வெள்ளி, 23 மே, 2014

திருநீறு பூசுவதன் தத்துவம் என்ன?

"சுந்தரமாவது நீறு' என்று ஞானசம்பந்தர் பாடுகிறார். அதாவது, முகத்திற்கு ஒளி பொருந்திய அழகைக் கொடுப்பது திருநீறு. தற்காலத்தில் மலிந்து கிடைக்கும் அழகு சாதனப் பொருட்களை உபயோகப்படுத்தி முகத்தைக் கெடுத்துக் கொள்கிறார்கள். சுத்தமான பசுஞ்சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறைப் பூசிக் கொண்டால் தோல் சம்பந்தமான நோய்கள் வராது. இதற்கு பஸ்மம் என்றும், விபூதி என்றும் பெயர். "பஸ்மம்' என்றால் "செய்த பாவங்களைப் போக்கி இனி பாவம் செய்யாத நல்ல சிந்தனையைத் தரக்கூடியது' என்று பொருள். "விபூதி' என்றால் "ஐஸ்வர்யம்' என்று பொருள். விபூதி வீட்டிலும் நெற்றியிலும் இருந்தாலே லட்சுமி கடாட்சம் பெருகும். ""சாந்தம் ஈது என்று எம்பெருமான் அணிந்த நீறு கொண்டார், இடர்களையாய் நெடுங்களம் மேயவனே'' என்றும் பாடுகிறார் சம்பந்தர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக